பக்கம் எண் :

408கவிமணியின் கவிதைகள்

Untitled Document
சரணம்

  அண்டும் அடிமை தனை
     அற்று நொறுங்கிய விழ
சண்டை ஒழிந்துலகில்
     சமரசம் ஓங்கிவரப்
பண்டை முடியரசு
     பணிந்த படமெடுக்க
எண்டிசையும் புகழ
     எழுந்த குடியரசு
சாதி சமய வெறி
     தளரக் கலை வளர
நீதி வளர அறம்
     நிலைக்க நீதி வளர
ஆதி பகவனடிக்
     கன்பு வளரச் செய்த
மாதவப் பயனென
     வாய்த்த குடியரசு.
 

27. ஒரு வரம்

இராகம் - முகாரி     தாளம் - ஆதி

பல்லவி

1811 இன்னிசைக் கவிபாட ஒருவரம்
     எனக்கருள் செய்வா யம்மா!
 

அநுபல்லவி

  கன்னலும் தேனும்முக்
     கனியும் கனிந்தொழுகிச்
சொல்நயம் பொருள்நயம்
     தொடைநயம் பெருகவே
(இன்னிசைக்)

சரணம்

  பன்னரும் செய்தமிழின்
     பரிமளம் வீசஉன்றன்
பொன்னடி போற்றிமாலை
     புனைந்துய்ய வேண்டிநின்றேன்,