பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு409

Untitled Document
  சின்னஞ்சிறிய பிள்ளைச்
     சீகாழிப் பிள்ளையைக்கண்
டன்னையென அமுதம்
    அளித்த மகேச்வரியே!
(இன்னிசைக்)

28. ஏக பரம்பொருள்

இராகம் - சங்கராபரணம்     தாளம் - சாபு

பல்லவி

1812 எப்பெயர் சொல்லி அழைப்பேன்! - ஏழை எளியேன்
     எங்குனைக் கண்டு தொழுவேன்!
 

அநுபல்லவி

  அப்பனும் அம்மையுமாய்
     அனைத்துல கையுமீன்ற
தற்பரமாம் பொருளே!
     சமயா தீதப் பொருளே! 
(எப்பெயர்)

சரணம்

  ஓடி ஓடி அலைந்தேன்
     ஊர்பல சுற்றி வந்தேன்;
தேடித் தேடி நிதமும்
     சிந்தை தளர்ந்து நின்றேன்;
பாடிப் பாடி இனியுன்
     பதம்பெற ஆசை கொண்டேன்;
ஈடும் எடுப்பு மிலா
     ஏக பரம் பொருளே! 
(எப்பெயர்)

  காவியம் கற்றலுத்தேன்,
     கதைகளும் கேட்டலுத்தேன்;
மேவிய விதிமுறை
     விரதங்கள் காத்தலுத்தேன்;
பூவினைப் பெய்துபல
     பூசைகள் செய்தலுத்தேன்;
யாவுமாய் அல்லவுமாய்
     இருந்த பரம்பொருளே! 
(எப்பெயர்)