Untitled Document | | ஓதிய குருவிடம் உபதேசம் பெற்றலுத்தேன்; போதனை செயவந்த புராணம் படித்தலுத்தேன்; வாதுசெய் பண்டிதரின் வழக்கையும் கேட்டலுத்தேன்; ஆதி அநாதியாகி அமர்ந்த பரம்பொருளே! | (எப்பெயர்) |
இராகம் - ஸிம்மேந்திர | | | மத்யமம் தாளம் - ரூபகம் |
1813 | | பாதை யறியாமல் - நின்று பரதவிக் கின்றேன் ஏழை | |
| | வாதும் பெறாமையும் வஞ்சகமும் சூதமே வேதனை செய்யுமிவ் வெய்ய வனந்தனில் | (பாதை) |
| | திங்களும் கங்கையும் சென்னியிற் சூடிய மங்கையோர் பாகனே! வானோர் பெருமானே! எங்குனைக் காண்பேனோ? என்றுன் பத நிழல் தங்கியிருந்துப சாந்தி பெறுவேனோ? | (பாதை) | |
|
|