முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 411 |
Untitled Document
1814 | | உன்னையே நம்பினேன் அம்மா! - உறுதுணையே றொருவரும் இல்லை அம்மா! | |
இராகம் - ஸாவேரி | | | தாளம் - ரூபகம் |
| | அன்னையே! அழகியே! அகிலாண்ட நாயகியே! தென்னவர் குலவிளக்கே! தேவிமீ னாட்சியே! | (உன்னையை) |
| | முடிகொண்ட மன்னரெல்லாம் முடிந்து முழுகிப் போனார், குடிகண்ட ஆட்சியிலும் குழப்பம் ஒடுங்கிக் காணோம், வெடிகுண்டு வீசிமக்கள் விளையாடத் துணிந் திட்டார், பொடியுண் டழிந்திடாமல் புவனம் முழுதுங் காக்க | (உன்னையை) |
| | குற்றம் குறைக ளெல்லாம் குணமாக மாறுதற்குச் சுற்றும் பகையை முற்றும் துரத்தி ஒடுக்குதற்கு வெற்றி சிறப்பதற்கு வீரம் தழைப்ப தற்குப் பெற்ற சுதந்தி ரத்தைப் பேணி வளர்ப்பதற்கு | (உன்னையை) | |
|
|