பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு415

Untitled Document
எல்லையி லாதபே
     ரின்பம் அளிப்போலைத்
34. முருகன் திருப்பதிகள்
இராகம் - காபி                   தாளம் - ஆதி
பல்லவி
1818 பாடிப் பணிவோவோ மே! - பக்தியொடு
     பாடிப் பணிவோ மே!
கண்ணிகள்
பாரகம் போற்றிப் பரவும் பரங்குன்றில்
     தாரக மாகவே தங்கும் தயாளனைப்
(பாடிப்)
இந்திரற் குற்ற இடரினைப் போக்கிய
     செந்தில் முருகனை, தெய்வானை கேள்வனைப்
(பாடிப்)
புள்ளி மயிலேறும் புண்ணிய மூர்த்தியை,
     வள்ளி மணாளனை, வையா புரியானைப்
(பாடிப்)
வீராதி வீரனை, விசாகப் பெருமானை,
     ஈராறு கையனை, ஏரகத் தண்ணலைப்
(பாடிப்)
காலைக் கதிரெனக் காணும் பழமுதிர்
     சோலைக் குமரனைச் சூரசம் மாரனைப்
(பாடிப்)
இன்றமிழ் வாணருக் கென்றும் அருள்வானை,
     குன்றுதொ றாடும் குகனைக் குழகனைப்
சிங்க முகனுயிர் சிந்திய காலனை,
     கங்கையின் மைந்தனைக் கதிர்காம வேலனைப்
(பாடிப்)
35. கல்விச் சாலை
இராகம் - ரீதி கௌள            தாளம் - ஆதி
பல்லவி
1819 திருவடி தொழுகின்றோம் - அன்பொடு
     திருவடி தொழுகின்றோம்.