பக்கம் எண் :

416கவிமணியின் கவிதைகள்

Untitled Document
அநுபல்லவி

  குருவடி வாக நின்று
     குறையெலாம் போக்கி நலம்
அருள்செய வேண்டும் எங்கள்
     ஆண்டவனே! உன்றன்
(திருவடி)

சரணம்

  தருமம் தழைத்திடவே
     சத்தியம் ஓங்கிடவே,
பருவ மழை பொழிந்து
     பயிர்கள் செழித்திடவே,
திருவளர் கலையெல்லாம்,
     தினமும் வளர்ந்திடவே,
அருள்வழி போற்றி மக்கள்
     அனைவரும் வாழ்ந்திடவே
(திருவடி)

  புத்தி சிறந்திடவே
     புலமை நிரம்பிடவே,
சக்தி பெருகிடவே
     சற்குணம் வாய்ந்திடவே,
உத்தம ராகி நாங்கள்
     உலகில் உழைத்திடவே,
நித்தமிக் கல்விச்சாலை
     நிலைத்து விளங்கிடவே
(திருவடி)

36. சேவல் கோடியோன்

இராகம் - ஆரபி     தாளம் - ஆதி

பல்லவி

1820 வந்தனை செய்வோமே! - அனுதினம்
     வாழ்த்தி வணங்கு வோமே!