முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 433 |
Untitled Document
| | வண்ணமலர்க ளேதும் வாசம் தருவதில்லை; பண்ணில் இனிமையில்லை, பாலிற் சுவையுமில்லை; கண்ணில் உறக்கமில்லை, கருத்தோர் நிலையிலில்லை; எண்ணி அளப்பதேனோ? எல்லாம் அறிவாயோடி? புண்ணியம் உண்டடி, பொற்றொடியே! இன்று | (நல்ல) |
இராகம் - கல்யாணி | | | தாளம் - மிச்ரசாபு |
1815 | | யாரிவன் அறிவா யோடி? - இவனிடத்தில் என்ன உறவுனக் கடி? | |
| | ஊருண்டோ? பேருண்டோ? உற்றார் பெற்றா ருண்டோ? சீருண்டோ? சிறப்புண்டோ? தெரிந்தா ரெவரு முண்டோ? | (யாரிவன்) |
| | பிச்சை யெடுத் தலைகின்றான் - சுடலையிலே பேயுடன் ஆடுகின்றான், நச்சரவைக் கழுத்தில் - தொங்கவிட்டு நல்லணி பூணுகின்றான்; அச்சம் தரும் புலித்தோல் ஆடையாய் உடுக்கின்றான், இச்ச கத்தில் பித்தன் இவனைப்போல் எங்குமுண்டோ? | (யாரிவன்) | |
|
|