பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு435

Untitled Document
சரணம்

  பாடிப் புகழ்ந்து நிதம் - நடராஜன்
     பாதம் பணிந்திடாமல்,
ஓடி உலகெங்கும்
     ஊரூராய்ச் சுற்றி
வாடி வருந்தி
     மலைவதேன் நெஞ்சமே!
(கண்)

64. குற்றம் பொறுத்தருள்

இராகம் - மாயாமாளவ     கௌள தாளம் - மித்ரசாபு

பல்லவி

1848 குற்றம் பொறுத்தரு ளையா! - உன்னை நிதம்
     கும்பிடு கின்றே னையா!
 

அநுபல்லவி

  கற்றைச் சடைசுழலக்
     கங்கை கறங்கத் தில்லைச்
சிற்றம் பலத்தில் ஆடும்
     தேவாதி தேவா! என்
(குற்றம்)

சரணம்

  பொய்யை மெய்யாக எண்ணிப்
     புவன வலையில் சிக்கி,
உய்யும் வழியறியா
     துள்ளம் கலங்கி நின்றேன்;
ஐயநின் பாத மல்லாமல்,
     ஆந்துணை வேறுண்டோ?
தையலோர் பாகம் கொண்ட
     தரும குணாலயா! என்
(குற்றம்)