| | பல்லவி | |
1849 | | அஞ்சி வந்தே னையா! - என்னை ஆள வேண்டு மையா! | |
| | அநுபல்லவி | |
| | தஞ்சம் வேறில்லைச் - சுசிந்தைத் தாணு மாலயா! | (அஞ்சி) |
| | சரணம் | |
| | பண்டனசூயை - மகவாய்ப் பாலமுத முண்டோய்! மண்டலம புகழும் - ஞான வனத்தில் வாழ் மணியே! | (அஞ்சி) |
| | அருளைத் தேடாமல் - உன்றன் அடிமை யாகாமல், பொருளைத் தேடிநின்றேன் - வீணாய்ப் பொழுதைப் போக்கிவிட்டேன் | (அஞ்சி) |
| | செய்பிழை யெல்லாம் - எண்ணிச் சிந்தை தளர்கின்றேன்; உய்வழி காணாமல் - இந்த உலகில் வாடுகின்றேன் | (அஞ்சி) |