பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு439

Untitled Document
69. சரத் காலம்

இராகம் - நவரஸக்கன்னட     தாளம் - ஆதி

பல்லவி
1853 அற்புதக் காட்சி ஈதையா! - கண்ணுக்கு
     ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஐயா!
சரணம்
பொன்னிறம் காணுதே ஐயா! - ஒளி
     பொங்கு மரகதம் மின்னுதே ஐயா!
செந்நெற் கழினியோ ஐயா! - இது
     செல்வத் திருவாழ் அரங்கமோ ஐயா!
(அற்)
மேகம் படருது பாராய் - அதை
     வேட்டை யாடிச்சுட ரோட்டுது பாராய்!
ஏக மயமாக வேதான் - உலகு
     எங்கும் பரந்தொளி வீசுது பாராய்!
(அற்)
செங்கதிர் செய்யும் விழவில் - மலர்த்
     தேனையும் உண்ணா தலையுதே வண்டு;
தங்கு குளக்கரைத் தாரா - சுற்றித்
     தன்னை மறந்து முழங்குதே ஐயா!
(அற்)

70. சரத்கால விழா

இராகம் - பிரஹரி     தாளம் - தித்ர ஏகம்

1854 நீலவான் முகட்டை முட்டித்
     தாக்கிடு வோமே - இந்த
நீண்டவெளி தன்னைச் சுற்றிக்
     கொள்ளை கொள்வோமோ;
வேலையின்று காலை செய்ய
     வேண்டாம் வேண்டாமே - இனி
வீட்டினுக்கும் போக வேண்டாம்,
     போக வேண்டாமே