முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 49 |
Untitled Document
311 | | மாங்கனியும், நல்ல வருக்கைப் பலாக்கனியும், வாங்கியுன் அம்மான் வருவார்; அழவேண்டாம்! |
312 | | கண்ணுறங்கு, கண்ணுறங்கு; கண்மணியே! கண்ணுறங்கு; ஆராரோ ஆராரோ? ஆரிவரோ? ஆராரோ? |
313 | | அப்பா எழுந்திரையா! அரசே எழுந்திரையா! கொக் கொக்கோ என்று கோழி அதோ கூவுது பார்! |
314 | | கா கா கா என்று காகம் பறக்குது பார்! கிழக்கு வெளுக்குது பார்! கிரணம் பரவுது பார்! |
315 | | பூ மலர்ந்த ரோஜா புதிய மணம் வீசுது பார்! வந்து வந்து வண்டு வட்டம் சுழலுது பார்! |
316 | | கறவைப் பசுவை அதன் கன்று சுற்றித் துள்ளுது பார்! பால் குடிக்க வேண்டாமோ? பழம் தின்ன வேண்டாமோ? |
317 | | பாடங்க ளெல்லாம் படித்திட வேண்டாமோ? சீக்கிரம் பள்ளிக்குச் சென்றிட வேண்டாமோ? |
318 | | காலையும் ஆச்சுதையா! கண்விழித்துப்பாரையா! அப்பா எழுந்திரையா! அரசே எழுந்திரையா! | |
|
|