பக்கம் எண் :

50கவிமணியின் கவிதைகள்

Untitled Document
46. காலைப் பாட்டு
319 அருணன் உதித்தனன்; அம்புஜம் விண்டது;
     அளிகளும் மொய்த்தன; பாராய்!
     அம்மா! நீ எழுந்தோடி வாராய்!

320   பசிய புல் நுனியில் பதித்தவெண் முத்தமோ?
     பனித்துளி தானோ? நீ பாராய்?
     பைங்கிளி! எழுந்தோடி வாராய்!

321   பொழுது விடிந்தது; பொற்கோழி கூவிற்று;
     பூஞ்செடி பொலிவதைப் பாராய்!
     பொன்னே! நீ எழுந்தோடி வாராய்!

322   காகம் கரைந்தது; காலையும் ஆயிற்று;
     கனியுதிர் காவினைப் பாராய்!
     கண்ணே! நீ எழுந்தோடி வாராய்!

47. காக்காய்
323   காக்காய்! காக்காய்! பறந்து வா;
கண்ணுக்கு மை கொண்டு வா.
324 கோழீ! கோழீ! கூவி வா;
குழந்தைக்குப் பூக் கொண்டு வா;
325 வெள்ளைப் பசுவே! விரைந்து வா;
பிள்ளைக்குப் பால் கொண்டு வா.

48. கோழி
326   கோழீ! கோழீ! வா வா!
     கொக்கோ கோ என்று வா;
கோழீ! ஓடி வா வா;
     கொண்டைப் பூவைக் காட்டு வா.

327 குத்திச் சண்டை செய்யவோ?
     குப்பை கிண்டி மேயவோ?
கத்தி போலுன் கால்விரல்
     கடவுள் தந்துவிட்டனர்!