பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு51

Untitled Document
328   காலை கூவி எங்களைக்
     கட்டில் விட்டெ ழுப்புவாய்;
வேலை செய்ய ஏவுவாய்!
     வெற்றி கொண்டகோழியே!

329   கோழீ! கோழீ! வா வா;
     கூரை விட் டிறங்கி வா;
கோழீ! முட்டை இட வா;
     கூட்டில் அடை காக்க வா.

330   பெட்டைக் கோழீ! வா வா;
     பிள்ளைகளைக் கூட்டி வா;
குட்டை நெல்லைக் கொட்டினேன்;
     கொத்திக் கொத்தித் தின்ன வா.

331   வஞ்சமாயப் பருந்ததோ
     வானில் வட்டம் போடுது,
குஞ்ச ணைத்துக் காப்பாயோ?
     கூட்டில் கொண்டு சேர்ப்பாயோ?

49. நாய்

332   வீட்டு வாசல் காப்பவன்
     வேட்டை யாட வல்லவன்,
ஆட்டுக் கிடைப் பாண்டியன்,
     அன்பு மிக்க தோழன்.

333   உண்ட சோற்றை எண்ணி
     உயிரும் விடத் துணிபவன்,
மண்டலத்தில் நாய்போல்
     வாய்த்த துணை உண்டோ?

50. கிளி

334 தேமலர்ச் சோலையிலே - வாசமெழு
     தென்றல் உலாவையிலே,
மாமண மங்கையைப்போல் - பெரிது
     மகிழ்ந்துநீ தங்கினையோ?