பக்கம் எண் :

514கவிமணியின் கவிதைகள்

Untitled Document
536 வில்லுக்காரி - வில்லிசை என்னும்   நாட்டார் கலை நிகழ்த்தும்
பெண் கலைஞர்
540 சல்லடம் - நாட்டார்           தெய்வக் கோவில் விழாவில்
சாமியாடுகின்றவர் இடையில் அணிந்திருக்கும் நிக்கர் போன்ற உடை; இதன்            கீழ்ப்பகுதியில் மணிகள் வைத்துத்
தைக்கப்பட்டிருக்கும்.
 கச்சை - சல்லடத்தை இடுப்பில் கட்டப் பயன்படும் நீண்ட துணி
542  போக்கில்லாத பயல் - வசதியில்லாதவனைப் போல்
546 பிலே - பயலே
547 சன்னதி - நாட்டார் கோவில்        வளாகம்; சன்னதி என்பது
பெருநெறித் தெய்வக்      கோவிலின் முன்பகுதியைக் குறிக்கப்
பயன்படும் சொல். இங்கு காரணவரின் அறிவீனத்தைக் கிண்டல்
செய்ய அவரே அப்படிக் கூறுவதாகச் சொல்லப்படுகிறது.
547 தறித்த - வெட்டிய (பலிக்காக வெட்டிய)
கடா - ஆண் ஆடு
550 மக்கள் - காரணவரின் மருமகன்கள்
552 கொடியிறைச்சி - அதிக அளவில்  ஆட்டிறைச்சி கிடைக்கும்
நிலையில் அதில் உப்பும் மஞ்சளும்   தடவி, நீண்ட கயிற்றில்
கோர்த்து வெயிலில் காய வைப்பர். பின்  தேவையான போது
நீரில் ஊறவைத்துப் பயன்படுத்துவர்.இவ்விறைச்சி,
கொடியில் (நீண்ட கயிறு) காயுமாறு கட்டப்படுவதால்
கொடியிறைச்சி எனப்பட்டது.
557 முடங்கினால் - நின்று போனால்
558 குடும்ப தோஷம் - குடும்பத்திற்கு இடையூறு
563 பந்தல் - இறந்த வீட்டின் முன்னே போடப்படும் ஓலைக்
கொட்டகை
பாடை - பிணத்தைத் தூக்கிச்       செல்ல மூங்கிலால்
கட்டப்படும் வாகனம். இது தேர்   போன்ற அமைப்பில்
செய்யப்படுவதால்தேர்ப்பாடை  எனவும் படும்.    இது
செய்வது குறித்த ஒப்பாரிப் பாடல் உள்ளது.
564 பறை மேளம் - பறையர்கள் அடிக்கும் தப்பு மேளம்;
பாட்டு - கூலிக்காகப் பாடப்படும் ஒப்பாரிப் பாடல்கள்
565 நடைமாற்று - பிணத்தைச்         சுமந்து செல்பவர்களும்,
இறந்து போனவரின் மக்களும்  வீதியில் நடக்கும் பகுதியில்
விரிக்கப்படும் நீண்ட துணி;இத்துணியை விரிக்கும் பொறுப்பு
ஊர்வண்ணானுடையது.