Untitled Document
367 | | பச்சைப்புல்லைத் தின்று வெள்ளைப் பால்தரநீ என்ன பக்குவஞ் செய்வாய்? அதனைப் பகருவையோ? பசுவே! உச்சியுடல் நக்கி, ஈன்ற உடனுனது கன்றை, உயிரெழுப்பும் மாயம் எதோ? உரைத்திடுவாய், பசுவே! |
368 | | வாய்க்கினிய பால்தருவாய்; வயற்குர மும்தருவாய் வண்டிக்கட்டக் காளையும் நீ வளர்த்தளிப்பாய், பசுவே! தாயில்லாப் பிள்ளைகட்குத் தாயாவாய்; நோயால் தளர்பவர்க்கு மருத்துவச்சி தானாவாய், பசுவே! |
369 | | அம்மா பாலைக் கறந்திடுவாள், பாலைக் காய்ச்சி ஆறவைப்பாள்; ஆறின பாலில் உறைவிடுவாள், உறைவிட்ட பால் தயிராகும்; தயிரைக் கடைந்தால் மோராகும், மோரில் வெண்ணெய் படர்ந்துவரும்; வெண்ணையை உருக்கினால் நெய்யாகும், நெய்யில் அப்பம் சுட்டிடலாம்; நீயும் நானும் தின்றிடலாம். |
370 | | தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு - அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி. |
371 | | அம்மா என்குது வெள்ளைப் பசு - உடன் அண்டையில் ஓடுது கன்றுக் குட்டி | |
|
|