முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 55 |
Untitled Document
360 | | பவழக் காரத் தெருவிலே பவழங் காண வில்லையாம்; எவர் எடுத்துச் சென்றனர்? எனக் கறிந்து சொல்வையோ! |
361 | | பங்கஜாட்சி கையிலே பவழங் காண வில்லையாம்; எங்கும் உன்னைத் தேடினார், எடுத்த துண்டோ தத்தம்மா? |
362 | | அரசர் மார்பில் ஆரத்தை ஆரோ கொண்டு போனாராம்; திருடிச் சென்றார் எவரம்மா? தெரியு மானாற் சொல்லம்மா! |
| | 52. கூண்டுக்கிளி | | | சிறுவன் | 363 | | பாலைக் கொண்டு தருகின்றேன், பழமும் தின்னத் தருகின்றேன்; சோலைக் கோடிப் போகவழி சுற்றிப் பார்ப்ப தேன்கிளியே? |
364 | | காட்டி லென்றும் இரைதேடிக் களைத்தி டாயோ? உனக்கிந்தக் கூட்டில் வாழும் வாழ்வினிலே குறைகளேதும் உண்டோ சொல்? |
| | கிளி | 365 | | சிறையில் வாழும் வாழ்வுக்குச் சிறகும் படைத்து விடுவானோ? இறைவன் அறியாப் பாலகனோ? எண்ணி வினைகள் செய்யானோ? |
366 | | பாலும் எனக்குத் தேவையில்லை, பழமும் எனக்குத் தேவையில்லை; சோலை எங்கும் கூவிநிதம் சுற்றித் திரிதல் போதுமப்பா! | |
|
|