பக்கம் எண் :

54கவிமணியின் கவிதைகள்

Untitled Document
352   சின்னஞ் சிறுபள்ளியில் - உனக்கொரு
     சிங்காரப் பெஞ்சுமிட்டுத்
தின்னக் கனியளித்துப் பாலபாடம்
     செப்புவன் வா, கிளியே!

353   கண்ணுக் கினிமையாகி - எனதிரு
     காதும் குளிரச் செய்யும்
வண்ணப் பசுங்கிளியே! குயிலும் உன்
     மாதவஞ் செய்ததுண்டோ!

354   பாலுக்குச் சீனியைப் போல் - பசுந்தமிழ்ப்
     பாடலுக் கின்னிசைபோல்,
சோலைக்குப் பைங்கிளியை! - உனது
     துணையும் இனிதே, அம்மா!

355   உள்ளக் களிப்பெழுந்து - வெளியில்வந்து
     உன்னுருக் கொண்டதுவோ?
மெள்ளப் பிடித்துநெஞ்சில் - அணைத்திட
     வேட்கை மிகுதே, அம்மா!

51. கிளியை அழைத்தல்
356 பச்சைக் கிளியே! வா வா;
     பாலும் சோறும் உண்ண வா;
கொச்சி மஞ்சள் பூச வா!
     கொஞ்சி விளை யாடவா,

357   கவலை யெல்லாம் நீங்கவே,
     களிப் பெழுந்து பொங்கவே,
பவழ வாய் திறந்து நீ
     பாடுவாயோ தத்தம்மா!

358   வட்ட மாயுன் கழுத்திலே
     வான வில்லை ஆரமாய்,
இட்ட மன்னர் யாரம்மா?
     யான் அறியக் கூறம்மா!

359 பையப் பையப் பறந்துவா,
     பாடிப் பாடிக் களித்து வா;
கையில் வந்திருக்க வா,
     கனி யருந்த ஓடி வா,