முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு |
53 |
Untitled Document
343 | |
காட்டுத் தினைக்கதிரைப் - பறித்துநீ கண்டித்
தருந்தாமல், கூட்டுக் கெடுத்தோடும் - குறிப்பெது
கூறுவையோ? கிளியே! |
344 | |
ஒன்றை யொருகாலில் - நின்றுகனி உண்ணும் அரியவித்தை
கற்றதும் யாவரிடம்? - அவரைநீ காட்டுவையோ? கிளியே! |
345 | |
கானத் தினைப்புனத்தில் - குறமகள் காவலிற் கொள்ளையிடல்
ஈனச் செயல் அல்லவோ? - குலத்துக்கு இழுக்கமும் வந்திடாதோ? |
346 | |
செம்பவழ வாயைத் - திறந்துநீ செப்பும் மொழிகேட்கில்,
உம்பர் அமுதமெல்லாம் - செவியகத்து ஓடி யொழுகும், அடி! |
347 | |
கொம்பிற் கொலுவிருந்து - களித்துநீ கூவுங் குரல்வருமேல்,
பம்பி யெழுஞ்சோலை - எனக்குப் பரம பதம் அடியோ! |
348 | |
உண்ணும் கனியிலெழும் - சுவையினை உள்ளம் களிகொளவே,
பண்ணிற் கலந்திடநீ - தெரிந்துசெய் பக்குவம் ஏதடியோ? |
349 | |
பேசும் மரகதமே! - உனைத்தினம் பேணி வளர்த்திடுவேன்;
ஆசை யமுதமொழி - அளிக்கநீ அண்டையில் வந்திடாயோ? |
350 | |
பண்ணுக் சிசைந்ததம்மா! - பழத்தொடு பாலுங் கலந்ததம்மா!
மண்ணுக் கமுதமம்மா! - உனதுசெய் வாய்மொழி, தந்தையம்மா! | |
|
|