Untitled Document
383 | |
மங்கல மாக மணமும் நடந்தது; வாழ்க வாழ்கவே! மணமக்கள் வாழ்க
வாழ்கவே! |
| |
58. புலிக் கூடு | 384 | |
பந்தம் எரியுதோடி! - கண்களைப் பார்க்க நடுங்குதடி!
குந்தம்வாள் ஈட்டியெல்லாம் - கூடவே கொண்டு திரியுதடி! |
385 | |
வாயைப் பிளக்குதடி! - கையுறை வாளும் உருவுதடி!
பேயைப் படைத்தபின்னோ - இதனையும் பிரமன்
படைத்தான் அடி! |
386 | |
வாலை முறக்குது பார் - வால்நுனி வட்டஞ் சுழலுது
பார்; சாலப் பதுங்குது பார் - நம்மீது
சாடவும் நோக்குது பார்! |
387 | |
இடித்து முழங்குதடி! - தொண்டையும் இரும்பாலே
செய்ததோடி! அடுத்து நெருங்காதேடி! - அதுமிக
ஆங்காரம் கொள்ளுதடி! |
388 | |
கூட்டில் அடைத்திடினும் - இரையினைக் கொண்டு
கொடுத்திடினும் காட்டில் வளர்ந்த குணம் - புலிகளும்
காட்டா திருக்குமோடி! |
389 | |
புன்னைப் புதுமலரும் - குவளையின் பூவுங்
கலந்ததுபோல், மின்னி மிளிரும் உடல் - கொடியஇவ்
வேங்கைக்கும் வேண்டுமோடி! |
390 | |
மானைப் படைத்த தெய்வம் - புலியையும் வளர்த்து
விடலாமோடி? தேனைப் பழித்த சொல்லாய்! - எனக்கு நீ | |
|
|