பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு59

Untitled Document
கதைப்பாட்டுகள் (5)
59. ஊகமுள்ள காகம்
391 தண்ணீர் கிடையாமல் - காகமொன்று
     தவித்த லைகையிலே,
மண்ணாற் செய்தஒரு - சாடியினை
     வழியிற் கண்டதம்மா!

392   சாடியின் மீதிருந்து - தலையைச்
     சரித்து நோக்கிடவே,
சாடியிலே தூரில் - சற்றே
     தண்ணீர் தெரிந்ததம்மா!

393   காகம் உடன்எழுந்து - சிறுசிறு
     கற்கள் பொறுக்கிவந்து,
ஊகமாய்ச் சாடியினுள் - அவற்றை
     ஒவ்வொன்றாய் இட்டதம்மா!

394 இட்டிட வேநீரும் - மேலே
     யெழுந்து வந்ததம்மா!
சட்டமாகக் குடித்துக் - காகம்
     தளர்ச்சி தீர்ந்ததம்மா!

395 ஊக்க முடையவர்க்குத் - துன்பம்
     உலகில் இல்லை அம்மா;
ஆக்கம் பெருகும் அம்மா! - இதை நீ
     அறியவேண்டும் அம்மா!

60. நெற்பானையும் எலியும்
396 பாட்டியின் வீட்டுப் பழம்பானை - அந்தப்
     பானை ஒருபுறம் ஓட்டையடா!
ஓட்டை வழியொரு சுண்டெலியும் - அதன்
     உள்ளே புகுந்துநெல் தின்றதடா!

397   உள்ளே புகுந்துநெல் தின்றுதின்று - வயிறு
     ஊதிப் புடைத்துப் பருத்ததடா!
மெள்ள வெளியில் வருவதற்கும் - ஓட்டை
     மெத்தச் சிறிதாகிப் போச்சுதடா!