Untitled Document
398 | | பானையைக் காலை திறந்தவுடன் - அந்தப் பாட்டியின் பக்கமாய் வந்தஒரு பூனை எலியினைக் கண்டதடா! - ஓடிப் போய்அதைக் கௌவியே சென்றதடா! |
399 | | கள்ள வழியினிற் செல்பவரை - எமன் காலடி பற்றித் தொடர்வானடா! உள்ள படியே நடப்பவர்க்குத் - தெய்வம் உற்ற துணையாக நிற்குமடா! |
| | 61. அப்பம் திருடின எலி | 400 | | செட்டியார் வீட்டில் அடுக்களையில் - சென்ற தீபா வளியின் றிரவுதனில், வட்டியில் அப்பம் இருந்ததம்மா - அதை வாசத்தி னால்அறிந் தோர்எலிதான். |
401 | | 'நெய்யினில் சுட்ட பணியாரம் - இது நேர்த்தியாய்ச் சுட்ட பணியாரம், பையப் பையக்கடித் துண்பதற்கும் - வெகு பக்குவமான பணியாரம். |
402 | | யார்க்கும் கிடையாப் பெருநிதியாம் - இதை யான் இன்று பெற்றதென் பாக்கியமே; பார்க்கும் பொழுதேநீர் வாயினிலே - ஊறிப் பாய்கின்றதே பசி யாகின்றதே. (அப்போது வேறு சில எலிகள் சத்தமிடக் கேட்டு:) |
403 | | 'என்ன சத்தம்! ஓ! ஓ! தம்பிமார்கள் - கூடி இங்கு விளையாட வந்தனரோ? அனைவர் ஓடி வருமுன்னமே - யானும் அப்பத்தைக் கொண்டு மறைந்திடுவேன். |
404 | | 'ஏதும் ஒருபொடி யாகிலும் - யான் அவர்க்கு ஈந்திடேன்; முற்றுமே தின்றிடுவேன்; ஓதியதானம் தனக்குப்போக - மீதி உள்ளவர் அல்லவோ செய்திடுவார்?' | |
|
|