பக்கம் எண் :

60கவிமணியின் கவிதைகள்

Untitled Document
398 பானையைக் காலை திறந்தவுடன் - அந்தப்
     பாட்டியின் பக்கமாய் வந்தஒரு
பூனை எலியினைக் கண்டதடா! - ஓடிப்
     போய்அதைக் கௌவியே சென்றதடா!

399   கள்ள வழியினிற் செல்பவரை - எமன்
     காலடி பற்றித் தொடர்வானடா!
உள்ள படியே நடப்பவர்க்குத் - தெய்வம்
     உற்ற துணையாக நிற்குமடா!

61. அப்பம் திருடின எலி
400   செட்டியார் வீட்டில் அடுக்களையில் - சென்ற
     தீபா வளியின் றிரவுதனில்,
வட்டியில் அப்பம் இருந்ததம்மா - அதை
     வாசத்தி னால்அறிந் தோர்எலிதான்.

401   'நெய்யினில் சுட்ட பணியாரம் - இது
     நேர்த்தியாய்ச் சுட்ட பணியாரம்,
பையப் பையக்கடித் துண்பதற்கும் - வெகு
     பக்குவமான பணியாரம்.

402   யார்க்கும் கிடையாப் பெருநிதியாம் - இதை
     யான் இன்று பெற்றதென் பாக்கியமே;
பார்க்கும் பொழுதேநீர் வாயினிலே - ஊறிப்
     பாய்கின்றதே பசி யாகின்றதே.
(அப்போது வேறு சில எலிகள் சத்தமிடக் கேட்டு:)

403 'என்ன சத்தம்! ஓ! ஓ! தம்பிமார்கள் - கூடி
     இங்கு விளையாட வந்தனரோ?
அனைவர் ஓடி வருமுன்னமே - யானும்
     அப்பத்தைக் கொண்டு மறைந்திடுவேன்.

404 'ஏதும் ஒருபொடி யாகிலும் - யான் அவர்க்கு
     ஈந்திடேன்; முற்றுமே தின்றிடுவேன்;
ஓதியதானம் தனக்குப்போக - மீதி
     உள்ளவர் அல்லவோ செய்திடுவார்?'