முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 61 |
Untitled Document
405 | | என்று சொல்லி அந்த அப்பத்தினை - வாயில் ஏந்திக் கடித்திழுத் தோடிடவே, கன்றப் பசித்த இளைஞரெல்லாம் - வந்து கால்கடுக்கத் தேடிப் போயினரே. |
406 | | ஆரும் அறியாத மூலையிலே - அந்த அப்பத்தை அவ்வெலி கொண்டுவைத்துக் கூரிய பல்லால் கறம்பி ஒருபொடி! கூடச்சிதறாமல் தின்றதம்மா! |
407 | | மட்டுக்கு மிஞ்சிப் புசித்ததனால் - மூச்சு வாங்கி வருந்தி வயிறூதி, கட்டப் படுவதைச் சுற்றத்தார் எல்லோரும் கண்டொரு பண்டிதர்க் காளும்விட்டார்! |
408 | | பண்டிதர் வந்துகை பார்த்தனர்; - அவ்வெலி பண்டம் முழுதையும் உண்டகதை விண்டதும் கேட்டு, குறிகளும் நோக்கி, விதிப்படி ஆய்ந்து விளம்பினரே; |
409 | | அப்பம் முழுதும்நீ தின்றனையே - அதை அன்பிற் குரியஉன் தம்பியர்க்கும் ஒப்பவே பங்கிட் டளித்திருந்தால் - துன்பம் ஒன்றும்வந் துன்னை அணுகாதே. |
410 | | 'அன்றியும் உன்தம்பி மாரும் கடும்பசி ஆறிக் களித்திருப் பார்கள் அன்றோ? இன்றினிச் செய்வதென் இவ்வுலகம் - விட்டு யாத்திரை போவது திண்ணம்' என்றார். |
411 | | ஆனதனாலே கிடைத்த பொருளை - நாம் ஆகும் மட்டும்பகுத் துண்ண வேண்டும்; ஈனமாந் தன்னயத் தால்வருந் துன்பமே; இன்பம் அளிக்கும் பொதுநயமே. |
412 | | அளவு கடந்திடில் ஆரமுதும் - விஷம் ஆகும் என்றுநம தான்றோர்கள் உளபடியே சொன்ன வாக்கியத் துண்மையை உள்ளத்திற் கொள்ளுங்கள், தோழர்களே. | |
|
|