Untitled Document | | 62. ஒளவையும் இடைச்சிறுவனும் | 413 | | வேனிற் பருவத்திலே - ஒருநாள் வெய்யில் வேளையிலே ஞானத் தமிழ்க்கடலென் - றிந்த நாடு புகழும்ஒளவை. |
414 | | தூரம் மிகநடந்து - களைத்துச் சோர்ந்து, வரும்வழியின் ஓரத்தில் ஓர்நாவல் - நிழலில் ஒதுங்கிச் சற்றுநின்றாள். |
415 | | அந்தமர மீதோர் - சிறுவன் ஆநிரை மேய்க்க வந்தோன், சிந்தை மகிழ்ந்து நல்ல - கனிகள் தின்று நிற்றல் கண்டாள். |
416 | | "நாவ றளுதப்பா! - நாலைந்து நாவற் கனிபறித்து, தா"வென வேண்ட - அவனும் "தருவேன்" என்று சொல்லி, |
417 | | "சுட்ட கனிவேண்டுமோ? - அன்றிச் சுடாத கனிவேண்டுமோ? இட்டமுள்ள கனியைப் - பாட்டிநீ இயம்பெ"னக் கேட்டான். |
418 | | கூறிய அம்மொழியால் - உள்ளம் குழப்ப மெய்தியப்பால் தேறி அவளும், "அப்பா! - சுட்ட தீங்கனி தா" என்றாள். |
419 | | மெத்தப் பழுத்துலைத்து - கறுத்து வெடித்த கனியாக, பத்துப் பதினைந்து - ஒன்றாய்ப் பறித்து மண்ணிலிட்டான். |
420 | | ஒட்டிய மண்நீங்கக் - கனியெடுத் தூதி நிற்கையிலே, "சுட்ட கனியிதெ"னச் - சிறுவன் சொல்லி மறைந்திட்டான். | |
|
|