பக்கம் எண் :

582கவிமணியின் கவிதைகள்

Untitled Document
பின்னிணைப்பு எண் - 15
கவிமணியின் வாழ்க்கைக் குறிப்புகள்

1876 ஜூலை 27 (மலையாள ஆண்டு 1050 ஆடிமாதம் 14 ஆம் நாள்
தாதுவருஷம்; ஆயில்ய நட்சத்திரம்)    கவிமணி பிறப்பு. தந்தை,
தேரூர் சிவதாணுபிள்ளை; தாய்,   தாமரைகுளம் மாணிக்கவாசகம்
பிள்ளையின் இரண்டாம் மகள் ஆதிலெட்சுமி.
1881 தேரூரில் ஆரம்பக்கல்வி; முதலில் படித்தது மலையாளம்.
1885 தந்தை சிவதாணுபிள்ளை மறைவு.
1888 தேரூர் சுடலைமாடன்  கோவிலில் பலியைக் கண்டு ‘நாடியறம்...’
என்ற பாடலைப் பாடியது.
1886-89 தேரூர் வாணந்திட்டு    திருவாவடுதுறை ஆதீனம் சாந்தலிங்கத்
தம்பிரானிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றல்.
1887 கோட்டாறு அரசுப் பள்ளியில் படிப்பு (இந்தப் பள்ளி இப்போது
கவிமணி தேசிக      விநாயகம் பிள்ளைநினைவு மேல்நிலைப்
பள்ளிமற்றும், ஆசிரியர் பயிற்சி நிறுவனம் எனப்படுகிறது)
1893 எப்.எ. படிப்பு; திருவனந்தபுரம்  ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில
பயிற்சி.
திருநெல்வேலி உமையொருபாகக்   குருக்கள் கோட்டாறு ஊரில் வைத்து சிவதீட்சை கொடுத்தல்.
1901 புத்தேரி குற்றாலம்       பிள்ளையின் மகள்  உமையம்மாளைத்
திருமணம் செய்தல்.
கோட்டாறு அரசு     ஆரம்பப் பள்ளியில்ஆசிரியர்பணி இதே
பள்ளியில் ஆசிரியர்பயிற்சி பள்ளியின் அறிவியல்ஆசிரியர்பணி.
1902 திருவனந்தபுரம், மகளிர்ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியார் பணி.
1904 திருவனந்தபுரம் மகராஜா     பெண்கள் உயர்நிலைப் பள்ளியில்
தமிழாசிரியர் பணி
1905 திருவனந்தபுரம் மகாராஜா பெண்கள்கல்லூரிதமிழ் விரிவுரையாளர்
பணி.
‘சுங்காங்கடையில் கோட்டை’, என்னும்ஆய்வுக்கட்டுரைஎழுதுதல்.
1905-1910 கல்வெட்டு வரலாறு தொடர்பாக ஆழ்ந்த படிப்பு