பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு583

Untitled Document
“Kerala Society Papers,”   “Travancore Times”, ‘தமிழன்
போன்ற இதழ்களில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுதல்;தமிழகத்தில்
சில இதழ்களில் குழந்தைப் பாடல்கள் வெளிவரல்.
1917-
1918
‘தமிழன்’ பத்திரிகையில்‘மருமக்கள் வழிமான்மியம்’வெளிவருதல்
1922
-23
நாஞ்சில் நாட்டு      வேளாளருக்கு ஒரு  கோட்டை வினாக்கள்
சிறுபிரசுரத்தை        வெளியிடுதல். வையாபுரிப் பிள்ளையுடன்
தொடர்பு ஏற்படல்
1922 மார்ச் 11 வையாபுரிப்பிள்ளை       பதிப்பித்த மனோன்மணியம்
பதிப்புக்கு உதவுதல்.
  திராவிடன் (சென்னை) தினப்பத்திரிகையில்“மனோன்மணியத்தின்
மறுபிறப்பு” கட்டுரை வெளி வரல்.
1920-
30
திருவனந்தபுரத்தில்                நீதிபதி கே.ஜீ. சேக்ஷையர்,
எஸ்.வையாபுரிப்பிள்ளை,  இசையரசுலட்சுமண பிள்ளை, கே.என்.
சிவராஜ பிள்ளை,             ‘தமிழன்’  பத்திரிகை ஆசிரியர்
முத்துசாமிப்பிள்ளை ஆகியோருடன்  இலக்கியம், தமிழகவரலாறு
குறித்து தொடர்ந்து உரையாடுதல்.   மதுரை தமிழ்ச் சங்கத்துடன்
தொடர்பு : திருவனந்தபுரம்சைவப்  பிரகாச சபையில் திருக்குறள்
ஆராய்ச்சி செய்தல்.
1926 அழகியபாண்டியபுரம்      பெரியவீட்டு முதலியார்வீட்டிலிருந்து
முதலியார் ஓலைச் சுவடிகளை அடையாளம் காணுதல்.
1930 வழக்குரைஞர்         பி. சிதம்பரம்பிள்ளை மூலம் முதலியார்
ஓலைச்சுவடிகளைப் பதிப்பித்தல்.
  முதலியார் ஓலைச்    சுவடிகள் பற்றி Kerala Society Papers
இதழில் பெரிய கட்டுரை வெளியிடுதல்.
  ராஜாகேசவதாஸ்      பற்றிய “திவான்வெற்றி” என்னும் கதைப் பாடலின் ஏட்டுச்சுவடியை டி.கே. ஜோசப்பின்உதவியுடன்  பிரதி
செய்தல்.(பின்னர் 1943 அளவில்    இது திருவிதாங்கூர்அரசால்
வெளியிடப்பட்டது)
1931 ஆசிரியப்     பணியிலிருந்து ஓய்வு பெறுதல்.நாகர்கோவிலுக்கு
வடக்கேயுள்ள   புத்தேரி என்ற கிராமத்தில் தங்குதல்தீண்டாமை
ஒழிப்புப்          பிரச்சாரத்திலும், கதரியக்கத்திலும் ஈடுபட்டுத்
தொண்டர்கள்   பாடுவதற்கென்றே    நாட்டார் சந்தங்களில் பல
பாடல்களைஇயற்றல்.
1932 ஸ்ரீ வைகுண்டம் சுப்பிரமணிய      பிள்ளை, என்பவர் சிவகாமி
வெளியீட்டகம் வழி கவிமணியின்   கவிதைகளைத் தனித்தாளில்
அச்சடித்துச்            சாதாரணமாகத் தைத்துப் புத்தகமாக்கி,
நண்பர்களுக்கு வழங்கல்.