பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு585

Untitled Document
1948 மே 14 நாகர்கோவிலில்   நடந்த மூன்றாம் தமிழ் எழுத்தாளர்
மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்தல்.
1950 ஜனவரி 6 கன்னியாகுமரியில்     நடந்த தென்குமரி எல்லை
மாநாட்டில் சிறப்புரை நிகழ்த்தல்.
1950 அக்டோபர் - நாகர்கோவிலில் ஆர்.கே. சண்முகம் செட்டியால்
தலைமையில்       நடந்த கூட்டத்தில்   பாராட்டுப் பெறுதல்.
அண்ணாமலை   பல்கலைக்கழகத்தில் மதிப்புறு பேராசிரியராக
அமர வேண்டிஅழைத்தல்
1950 டிசம்பர் 5 நாகர்கோவிலில்,  திருவாவடுதுறை மகாசன்னிதானம்
ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் பாராட்டுதல்.
1951 கவிமணியின் பாடல்களைப்         பாரிநிலையம் வெளியிடப்
பதிப்புரிமை பெறுதல்.
  திருவிதாங்கூரில் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக இந்தி மொழி
புகுத்தப்பட்ட போது நாகர்கோவிலில் அறிஞர்  பெருமக்களைக்
கூட்டி எதிர்ப்புத் தெரிவித்து,  அரசுக்கு அறிக்கை அனுப்புதல்.
1952 மே கவிமணி பிறந்த தேரூரில்  ஊர்மக்கள் நினைவுச்சின்னம்
அமைத்தல்.
  பாரி நிலையம்,  ‘கவிமணியின் உரைமணி’களை வெளியிடுதல்.
கவிமணியின்      பெயரால் நாகர்கோவிலில், நூல் நிலையம்
நிறுவப்படல்.
1953 ஜு லை பாரி நிலையம்     ‘தே.வி.யின் கீர்த்தனங்கள்’ நூலை
வெளியிடுதல்.
  நாஞ்சில் நாட்டு, கடுக்கரை     மணியங்கரம் மாநாட்டில் பங்கு
பெறுதல். கல்கத்தா           பாரதி தமிழ்ச் சங்கம், கவிமணி
விழாவைக் கொண்டாடுதல்; மலர் வெளியிடுதல்.
1954 ‘மலரும் மாலையும்’   செம்பதிப்பு வெளிவருதல். மு. சண்முகம்
பிள்ளையின் பெரு   முயற்சியால் இப்பதிப்பு உருவாக்கப்படல்.
கவிமணியின் கடைசிக்        கட்டுரை ‘வருங்கால அரசியல்
மொழி’ ‘கலைக்கதிர்’ இதழில் வெளிவருதல்.
1954 செப்டம்பர் 26 ஞாயிறு பகல்(மலையாள ஆண்டு 1130 புரட்டாசி
மாதம் 7 ஆம் தேதி   மகாளய அமாவாசை) மறைவு; அடக்கம் அன்று இரவு 2.30 மணிக்கு.
1976 ஜு லை 27-நூற்றாண்டு விழா நாகர்கோவிலில் நிகழ்தல்.
1999 கவிமணியின் நூற்கள் அரசுடைமை ஆக்கப்படுதல்