பக்கம் எண் :

8கவிமணியின் கவிதைகள்

Untitled Document
    வாசமெழு சோலைவாய் மதுவுண்டு வண்டினம்
     மதுரகீ தங்கள் பாட,
மந்தமா ருதம்வீச, வேனிலிங் கின்றெனது
     வாசலில் வந்தது, ஐயா!
ஆசையொடு நின்னையெதிர் நோக்கியிவ் வுள்ளத்தில்
     அமைதிபெற வீற்றிருந்து, என்
ஆவியை உனக்குரிமை ஆக்கிவிழி படுவதற்
     கானவொரு தருணம் இதுவே.

வேறு

16.   இன்னிசைநீ பாடுமுறை ஏதுமறி யேன்யான்;
     இரவுபகல் கேட்டின்பம் எய்திவியந் திடுவேன்;
மன்னுலகை ஒளிசெய்வ துன்னிசையின் ஒளியாம்;
     வானெங்கும் உலவுயிரும் உன்னிசையின் உயிராம்;
பன்னரிய நின்னிசையின் பாலாறு பொங்கிப்
     பாறைகளும் உடைந்துருளப் பாய்ந்தொழுகும் அனோடு
என்னிநிசையுங் கலந்தொழுக ஏற்றகுரல் காணேன்;
     எண்ணிலிசை வலையிலிழுத் தெனையாளும் இறையே!

17. உறுப்பனைத்தும் உயிர்பரந்திவ் வுருவமையும் வண்ணம்
     உனதுகரம் தீண்டுகுறிப் புணர்வதனால், எளியேன்
வெறுப்பரிய உடலென்றும் விளக்கமுறச் செய்வேன்;
     மேலாகி உயிர்க்குயிராய் விளங்குபரம் பொருளே!

18.   என்னுளத்து ஞானஒளி ஏற்றியமெய்த் தீபம்
     இறையாகும் நீ, அதனால் இறையேனும் பொய்கள்
மன்னுபல நினைப்புகளில் வந்துகல வாமல்
     வன்மையொடு காத்திடுவன்; வழுத்தரிய சிவமே!

19.   ஏழையுளந் திருக்கோயில் எனக்கொண்டு நீயும்
     எழுந்தருளி யிருக்குமுறை அறிந்து, அடிமை அங்கே
குழவரு வஞ்சனையைத் துரத்தி, நிறை அன்பாம்
     சுந்தரநாண் மலர்மாலை சூட்டிநிதம், தொழுவேன்.

20.   ஆயபல தொழிலெடுக்க ஆற்றல்தரு வதுநீ;
     அதனால்என் செய்கருமம் அனைத்தூடும் அடியேன்
தூயநிலை துலக்கிடவே துணிந்திடுவேன்; எவர்க்கும்
     சொல்லரிய பரம்பொருளே! சுயஞ்சோதிப் பொருளே!