முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 7 |
Untitled Document | | பொன்றுத லிலாதநிலை தரவல்ல உன்கரப் புனிதமுடல் தீண்ட லாலே, பூரித்த உள்ளமகி ழெல்லையற மாய்ந்ததும், போற்றமொழி யற்று நின்றேன்; நன்றுதவு கொடைகோடி இக்குழவி கைகளில் நாளும்நீ அள்ளி யிடினும், நான்குறைகள் சொல்லி அருள் வேண்டா திருந்திடேன், ஞானஒளி வீசி மதியே! |
14. | | பண்ணொழுகு பாடலைப் பாடென் றெனக்குமருள் பாலிக்கும்வேளை, இந்தப் பாரெங்கும் அறியாத கர்வமது பொங்கிப் பரந்துளம் விம்ம நிற்பேன்; அண்ணலுன் திருமுகம் நோக்கிநிற்பேன்; விழிகள் அருவிநீர் பாய நிற்பேன்; ஆகாத குணமெலாம் அடியோடு நீங்கநல் அமுதகுணம் ஓங்க நிற்பேன்; எண்ணரிய ஆழியைத்தாண்டுபுள்போல் அன்பும் இறகினை விரிக்கும், அதனால் ஏத்தியிசை பாடத் தொடங்குவேன்; நீயும் அதில் இன்புறுவை என்ப துணர்வேன்; நண்ணுதற் கானவழி வேறெதுங் கண்டிலேன்; நானுமென் களிம யக்கால், நண்பனென் றேயழைக் கின்றனன்; என்னையாள் நாதனே! ஞான பரனே! |
15. | | ஈசனே! ஒருகணப் பொழுதுயான் உன்னரு கிருந்திடற் கருளல் வேண்டும்; ஏழையேன் செய்வதற் காகவுள் கருமங்கள் யாவு மேபின் செய்குவேன்; நேசமுற நின்முகம் காணா திருக்கில் என் நெஞ்சுதடு மாறி யழியும்; நேர்ந்துகொள் பணிஎல்லை யில்லாத ஆழியாய் நீண்டுதுயர் தந்து நிற்கும்; | |
|
|