பக்கம் எண் :

90கவிமணியின் கவிதைகள்

Untitled Document
  மங்கி மாண்டவரை - எண்ணி
     வருந்த லேனோ? அம்மா!

565 ஆழ்ந்த நரகொன்று - நீயே
     அமைத்து வைத்துக் கொண்டாய்;
வீழ்ந்து வீழ்ந்து நிதம் - அதனில்
     வெந்துசாகின்றாய்.

566 'கர்த்தனே என்றன் - மகனைக்
     காத்த ருள்க!' வென
எத்தனை நாளாய் - நீயும்
     இரங்கு கின்றா யம்மா!

567 பேசா வுயிர்களை - ஈசன்
     பேண மாட்டானோ?
ஆசானும் நீயோ! - அவனோர்
     அறியாப் பாலகனோ?

74. வாழ்க்கைத் தத்துவங்கள்
568 நாமே நமக்குத் துணையானால்,
     நாடும்பொருளும் நற்புகழும்
தாமே நம்மைத் தேடிவரும்;
     சற்றும் இதற்கோர் ஐயமுண்டோ?

569 நெஞ்சிற் கருணை நிறைந்தவர்க்கு,
     நேயம் கொண்ட நெறியோர்க்கு,
விஞ்சும் பொறுமை யுடையவர்க்கு
     வெல்லும் படைகள் வேறுளவோ?

570 உள்ளந் தேறிச் செய்வினையில்
     ஊக்கம் பெருக உழைப்போமேல்,
பள்ளம் உயர்மே டாகாதோ?
     பாறை பொடியாய்ப் போகாதோ?

571 சாதிசாதி என்றுநிதம்
     சண்டை போட்டு, மண்டைகளை
மோதி மோதி உடைப்பதொரு
     மூடச் செயலென் றுணரீரோ?

572 வாட்டும் உலகில் வழுத்தரிய
     வாழ்க்கைத் துணையாம் மங்கையரை