முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 91 |
Untitled Document | | ஆட்டும் பொம்மை அடிமைகளாய் ஆக்கி வைப்ப தழகாமோ? |
573 | | கால நதியின் கதியதனில் கடவுள் ஆணை காண்பீரேல், ஞால மீது சுகமெல்லாம் நாளும் அடைந்து வாழ்வீரே? |
574 | | கருணையின்றி மனிதருள்ளம் கருங்கல் லான காரணத்தி னால்வந்த கஷ்டந் தன்னை வருணனையால் வேலையில்லாத் திண்டாட்டத்தால் வந்தவிளைவென்றுலகில் வழுத்து வாரால்! பொருளையெலாம், இறந்தவர்கள் யாவரேனும் பொக்கணமாய்க் கட்டியெடுத் தோடினாரோ? இருளை ஒளி என்பவர் முன் பேச்சும் உண்டோ? ஏழையுரை அம்பலத்தில் ஏறு மேயோ? |
575 | | ஏகாந்தம் யாவருக்கும் இசைய மாட்டாது; எந்நாளும் கூடியே வாழ வேண்டும்; சாகாத வரம்பெற்றோர் எவரும் இல்லை; தளர்ந்தவரைத் தாங்குவதே தரும மாகும்; ஆகாய மளவுயர்ந்து வளர்ந்து நின்ற அரண்மனையும் அரைநொடியில் அழியுமென்று பீகாரால் கொற்றாவால் அறியார் இந்தப் பேருலகிற் பின்எதனால் அறிவார்? ஐயா! |
576 | | எங்கே இருந்து வந்தாய்? குழந்தாய்! - அதை யானும் அறிந்திடச் சொல் குழந்தாய்! எங்கும் நிறைவெளியில் இருந்தேன் - சற்றே இங்கும் இருக்க வந்தேன், அம்மா! |
577 | | நீல மலர்போலும் விழிகள் - எங்கு நீ தேடிப் பெற்றாய்? என் குழந்தாய்! ஞாலம் இதற்கு வரும் வழியில் - வானம் நன்கொடை தந்தவை, அம்மா! | |
|
|