Untitled Document 578 | | கண்ணில் ஒளிவிளங்கக் கண்டேன் - அந்தக் காட்சியின் காரணம்என்? குழந்தாய்! விண்மீன் ஒளிசிறிது தங்கி - அங்கு மின்னி விளங்குகின்ற தம்மா! |
579 | | நெஞ்சம் களிக்கவரும் குழந்தாய்! கண்ணில் நீர்த்துளி நின்றகதை எதுவோ? வஞ்சப்புவியில் எனைத் தேடி - அது வழியெதிர் வந்துநின்ற தம்மா! |
580 | | ஒளிரும் உன் நெற்றியிலே இந்த - மென்மை உண்டான தெப்படி? என் குழந்தாய்! தளிரும் தழையச் செய்யுங் கரமொன்று - அதைத் தடவி அளித்ததுண்டு என் அம்மா! |
581 | | பூவின் அழகுனது முகத்தில் - என்றும் பொழிந்திடும் காரணம்என்? குழந்தாய்! தேவரும் கண்டறியாக் காட்சி - யானும் தெளிவுறக் கண்டபலன், அம்மா! |
582 | | புன்னகை பூத்திடும் வேளை - ஒரு புதுமையும் காண்பதேனோ? குழந்தாய்! முன்னம் அரம்பையர்கள் மூவர் - ஒன்றாய் முத்தம் அளித்தகுறி, அம்மா! |
583 | | ஆசைக் குழந்தாய்! இச் செவிகள் - உன்னை அடைந்த வரலாறே துரையாய்? ஈசனும் பேசிடவாய் திறந்தான் - கேட்க இவையும் எழுந்தன, என் அம்மா! |
584 | | இன்பச் சிறுகரங்கள் இவைதாம் - உனக்கு எவ்வா றமைந்தன? என் குழந்தாய்! அன்பு வளர்ந்திவ்வுரு வாகி - என்னை அண்டி அணைந்திருக்கு தம்மா! |
585 | | ஆவி குளிரவருங் குழந்தாய்! - இந்த அழகிய கால்கள் எங்கே கொண்டாய்? தேவப் பிறவிகளின் சிறகோடு - ஒரு சிங்காரப் பெட்டியிலே கண்டேன். | |
|
|