பக்கம் எண் :

94கவிமணியின் கவிதைகள்

Untitled Document
594 வளர்த்த ரோஜாவும் - புதுமண
     மகிழ்ச்சி காட்டு தம்மா!
அழைத்து வாராய், அம்மா! - தம்பியும்
     அறிந்திடானோ? அம்மா!

வேறு

தாய்

595 யார் அழைத்தாலும் - அவன் செவிக்கு
     எட்ட மாட்டாதே;
பாரில் நம்மை அவன் - இனிவந்து
     பார்க்க மாட்டானே.

596 வாச மலரைப்போல் - வளர்ந்தவன்
     வாடி விட்டானே;
ஈசன் சன்னதியில் - விளையாடி
     இருக்கின் றான்அப்பா!

597 குயிலைத் தேடானோ? கிளியொடு
     கொஞ்ச வாரானோ?
மயிலை நோக்கானோ - நம்மையெல்லாம்
     மறந்தும் போனானோ;

598 வேனிற் காலமெல்லாம் - நம்மையிங்கு
     விட்டிருப் பானோ?
யானும் என்னசெய்வேன்! - தனித்தனி
     இருப்ப தெப்படியோ?

599 காலை மாலைதனில் - சிற்றோடைக்
     கரையில், சோலைதனில்
சீலச் செல்வனொடு - சுற்றிநிதம்
     திரிதல் போச்சுதையோ!

600 இனிய கதையெல்லாம் - அவனைப்போல்
     யாவர் சொல்வாரம்மா!
கனியைச் செந்தேனை - இனிஎந்தக்
     காலம் காண்பேன், ஐயோ!