முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 95 |
Untitled Document | | 78. மூன்று விஷயங்கள் | 601 | | கூவிப் பறக்கும் ஒரு - கிளியினைக் கூட்டில் அடைத்து வைத்தால் தேவர் உலகமெலாம் - அதுசினத் தீயை யெழுப்பிடுமே! |
602 | | மன்னிய சோலையிலே - ஒருகுயில் வாடி வருந்து மெனில், கின்னரர் கிம்புருடர் - தளர்ந்ததும் கீதம் இழப்பார் ஐயோ! |
603 | | சிட்டுக் குருவிக்கேனும் - ஒருசிறு தீங்கினைச் செய்பவரை நட்டநல் நண்பராக - உலகமும் நம்பிக்கை கொள்வதுண்டோ? |
| | 79. பறவையின் சிந்தனை I | | | முட்டைக் கரு | 604 | | ஆதியில் ஒருசிறு வீட்டை அண்டியான், ஏதுமங் கொருகுறை யின்றி வாழ்ந்தனன்; ஓதுமிவ் வுலகுருச் சிறுத்து ருண்டவோர் சோதிவெண் நீல்நிறத் தோடென் றெண்ணினேன். |
| | கூட்டில் குஞ்சு | 605 | | விடிது வீ்ழ்ந்திட, வேறும் ஓரிடம் கூடியே சிலதினம் குடியிருந்தனன்; ஈடறு வையகம் உலகம் என்அனை நாடிய காப்பகம் என்று நம்பினேன். |
| | இறகு முளைக்கும் சிறு பறவை | 606 | | கண்ணுறு பொருளவை காண ஓர்தினம் எண்ணிஎன் கூட்டரு கிறங்கி நின்றனன். திண்ணிய உலகில் தழையிற் செய்ததாம். புண்ணிய மில்விழி பொருந்தினேன் என்றேன். | |
|
|