Untitled Document
| | 607 முடிவினில் மரம் தழை முகடு தாண்டிவிண் படுமெழில் நீல்நிறப் பரப்பைக் கண்டனன்; தொடுமுல குண்மையில் எங்ஙன் தோன்றுமோ? அடிமுடி அறிகிலன்; அறிவர் யாவரே? |
608 | | முற்றுங் கருவாகி - ஒருசிறு முட்டையில் வாழ்க்கையிலே சுற்றும்உல கெனக்கே - உருண்டவெண் தோடா யிருந்ததம்மா! |
609 | | குஞ்சுப் பருவத்திலே - பிறிதொரு கூட்டில் இருக்கையிலே விஞ்சும் உலகினையான் - உலர்ந்தபுல் வீடாகக் கண்டேனம்மா! |
இறகு முளைக்கும் சிறு பறவை |
610 | | இறகு முளைக்கையிலே - பறந்திட யானும் பழகையிலே நிறையும் உலகெனக்குத் - தழைகொடி நேரிட மானதம்மா! |
611 | | நீண்ட வெளிவரவே - உயர்ந்தவிண் நீலந் தெரிந்த தம்மா! ஆண்டவ னன்றிஎவர் - உலகை அறிந்திட வல்லார் அம்மா! | |
|
|