முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 97 |
Untitled Document | | 80. குருட்டு பையன் | 612 | | இப்பிறப்பில் ஒரு பொழுதும் எனக்கறியமுடியா திருக்கும்ஒளி என்பதென்ன? இருவிழியின் அடையும் ஒப்பரிய நன்மைகள்இக் கண்கெட்ட சிறியேன் உணரும் வண்ணம் உரைத்திடுவீர் உற்ற உறவினரே! |
613 | | அனுதினமும் கண்காட்சி அற்புதங்கள் பேசி, அகங்களிப்பீர்? ஆதித்தன் சோதிமயம் என்பீர்; எனதளவில் வெம்மையெனத் தோற்றமிவன் செயலால் இரவுபகல் மாறிவரல் எங்ஙன் அறிவேனே! |
614 | | பாடிவிளை யாடுபொழு துறங்குபொழு தல்லால் பகற்பொழு திராப் பொழுதிப் பகுப்பெனக்கு முண்டோ? நாடியுணர்ந் திருக்கநிதம் கூடமெனில் எனக்கிந் நானிலத்தில் ஓயாத பகலாகும் அன்றோ? |
615 | | மைபடியும் வானமென்றும், வில்லென்றும், வர்ண வகையென்றும் மனமகிழ்ந்து வனப்புரைகள் தருவீர் ஐவகையிப் பொறியிருக்க வேறுபொறி யுறுமேல், அறியுலக மாட்சியெலாம் அளவிடவும் எளிதோ? |
616 | | உலகிலெனக் குற்றபெருங் குறைநோக்கி நீவிர் உளம்வருந்தல் பன்முறைநெட் டுயிர்ப்பொடு கேட்டறிவேன் அலகிறந்த பொறுமையக மிரக்கஒரு நாளும் அறியமுடி யாதகுறை அனுபவிப்ப தரிதோ? |
617 | | ஒருகாலும் நீக்கமுடி யாதகுறை வந்தென் உளத்திலெழும் பெருங்களிப்பை அழித்திட லாகாதே வருபாடல் இதுவழுத்து பொழுதேழைக் குருட்டு வாலிபனா யிருப்பினுமோர் மகராசன் யானே. |
| | 81. மலையும் அணிலும் | 618 | | 'அற்பத் திருடா! ' என்றெனை யழைத்த வெற்பே! யானும் விளம்பக் கேளாய்; 'அளக்க லாகா அளவும் பொருளும் துளக்க லாகா நிலையும் தோற்றமும் | |
|
|