14. சுவடியின் மரவு தெரிவுறு காதை |
கூடலில் மீனவன் பணி |
|
|
ஆங்கவன் றனக்குப் பூங்கொடி நல்லாய்! தீங்கொன் றுற்றது
செப்புவென் கேண்மோ! கேட்குநர் உள்ளம் கிளர்ந்தெழும் பாடல்,
நோக்குநர் மயக்கும் நுண்கலை ஓவியம், | |
|
கள்ளின் சுவைதரு காவியம் முதலன |
5 |
| வள்ளலின் வழங்கினன் வருவோர்க் கெல்லாம்;
அவ்வவர் திறனும் அறிவும் விழைவும்
செவ்விதின் ஆய்ந்துணர்ந் தவ்வவர்க் குரியன
பயிற்றினன், பயில்வோர் பல்கினர் நாடொறும்; | |
| | |
|
மாணவன் ஐயம் | |
| | |
|
செயல்திறம் நற்பயன் செய்துவரு காலை |
10 |
| | |
|
`இசையும் கூத்தும் இயம்பும் தமிழ்நூல் நசையுறும்
ஓவியம் நவில்நூல் உளவோ? ஒருநூ லாயினும் உருவொடு
காண்கிலேம்; எனஓர் ஐயம் எழுப்பினன் ஒருவன்; | |
| | |
|
தமிழின் பகைகள் | |
| | |
|
மனநலி வுற்று மற்றவற் குரைப்போன் |
15 |
|
`பலப்பல அந்நூல் படைத்தது தமிழ்மொழி
நிலைத்திடு சான்றுகள் நிறைதலும் காண்குவை;
நெருப்பும் நீரும் செருத்தொழில் புரிந்தன;
உருக்குலைந் தொழிந்தன ஓங்குயர் நூல்பல; | |
|
ஆடிப் பெருக்கில் ஆற்றொடு விடுத்தனம்; |
20 |
|
தேடிச் சுவைத்தன செல்லுப் பூச்சிகள் எஞ்சின
ஒருசில! நஞ்சினுங் கொடியர் வஞ்சினங் கொண்டென
அழித்தனர் மாய்த்தனர்; | |
--------------------------------------------------------------- |
|
கேட்குநர் - கேட்பவர், நோக்குநர் - காண்பவர். செரு - போர், | |
| | |