சங்கப் புதையலும் - சிலம்பின் சான்றும் |
|
| இத்தகு பகைஎலாம் எதிர்த்துத் தப்பின | |
| பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்,அச் | 25 |
| சங்கப் புதையலும் சாமி நாதத் துங்கன் உழைப்பால் தோண்டி எடுத்தோம்; சிற்றூர் யாங்கணுஞ் சென்றுசென் றோடிப் பெற்றஅவ் வேடுகள் பெருமை நல்கின; | |
| இத்தொகை நூல்களும் புத்தக உருவில் | 30 |
| வாரா திருப்பின் வளமிலா மொழிஎன நேரார் பழித்து நெஞ்சம் மகிழ்வர்; நல்லோன் தந்தனன் நம்புதை பொருளெலாம், செல்லார் குழுவும் சிதைக்கா தொழிந்தது; | |
| நல்லோய்! இசையும் நாடகச் சுவடியும் | 35 |
| | |
| வல்லோன் விழிக்கு மறைந்தன போலும்! அகப்பட் டிருப்பின் ஆவணப் பேச்சைத் தகர்த்தெறிந் தொழிப்பேன்; சுவடிகள் தவறினும் அந்நூல் தமிழுக் கிலையென் றறைதல் | |
| அளப்பே யாகும் அவ்வுரை நம்பேல்! | 40 |
| அளப்பரும் புகழ்நூல் சிலப்பதி கார உரைதரும் ஆசான் அடியார்க்கு நல்லான் புரையற உரைத்தது புலமுளோர் அறிவர்; | |
| | |
| பழந்தமிழ் இசைகள் | |
| | |
| யாழும் குழலும் எழுப்பிய இசைதான் | |
| வாழும் தமிழோ? வருமொழி இசையோ? | 45 |
| அவ்விசைக் கருவிகள் ஆய்ந்து கண்டவர் | |
--------------------------------------------------------------- |
| சாமிநாதன் - திராவிடக் கலாநிதி உ. வே. சாமிநாத ஐயர், நேரார் - பகைவர், செல்லார்குழு - கறையான் கூட்டம். | |
| | |