|
|
| செவ்விய தமிழர்; சிறந்தஇக் கருவிகள் எப்பொருட் டியற்றினர்? இசைப்பொருட் டன்றோ? பாணன் பாடினி பாடற் றொழிலோர் | |
| மேனாள் ஈண்டு மேம்பட வாழ்ந்தனர்; | 50 |
| அவர்தாம் எம்மொழிப் பாடல் இசைத்தனர்? ஆய்ந்துணர்! திணைகள் ஐந்தெனச் செப்பிய முன்னோர் இணையும் வகையால் பண்ணும் இசைத்தனர்; | |
| இவைஎலாம் மறந்தே இலைஎனல் முறையோ? | 55 |
| | |
| மீனவன் சங்கம் புகுதல் | |
| | |
| ஆதலின் நம்பால் அனைத்தும் இருந்தன; ஏதிலர் நம்மை இகழ்ந்துரை யாட நோதகச் சிலபல தீதுற் றழிந்தன; அந்தோ உலக அரங்குக் கொளிசெயும | |
| நந்தா விளக்கே! நாமிசைப் பாவாய்! | 60 |
| மண்ணக முதல்வி! எண்ணுநர் தலைவி! நண்ணுவ தேனோ நலிவுகள் நினக்கெனக் கண்கலங்கி நெஞ்சம் புண்ணடைந் திருப்ப, ஆங்கோர் பெருமகன் அவனுழை வந்து | |
| பாங்குடன் அவனுளப் பாடுணர்த் துரைக்கும்; | 65 |
| `அயரேல் மீனவ! அறைகுவென் கேள்நீ! பயில்தரு மறவர் பாண்டிய மரபினர் சங்கம் நிறுவித் தண்டமிழ்ச் சுவடிகள் எங்கெங் குளவோ அங்கெலாம் துருவித | |
| தொகுத்து வைத்துளார்; மிகுந்தஅச் சுவடிகள் | 70 |
| பகுத்துப் பார்ப்பின் பண்ணும் கூத்தும் வகுத்துக் கூறுநூல் வாய்க்கவும் கூடும்'; செவியில் இவ்வுரை தேனெனப் பாய்ந்தது; | |
--------------------------------------------------------------- |
| நோதக - வருந்த, நந்தா - அழியாத, துருவி - ஆராய்ந்து. | |
| | |