பக்கம் எண் :

சுவடியின் மரபு தெரிவுறு காதைபக்கம் : 103

 

 

 

குவிபடு கையாற் கும்பிட் டெழுந்து  
  சங்கம் புக்குத் தமிழே டனைத்தும் 75
  பொங்கும் மகிழ்வால் பொன்னியின் செல்வன்
நுண்ணிதின் நோக்கினன் கண்களி கொள்ளச்
சுவடியொன் றுற்றது துள்ளிக் குதித்தனன்;
 
  இவைஎலாம் மறந்தே இலைஎனல் முறையோ?  
     
 

மீனவன் எக்களிப்பு

 
     
  தவலரும் உவகை தன்னகம் நிறைக்கத்  
  குழந்தை யாகினன்; இருகை கொட்டி, 80
  இழந்ததைப் பெற்றேன் இனித்துயர் இல்லைஎன்
றாடினன் பாடினன் அவையகம் மறந்தே;
தேடிய சுவடி ஓடிவந் துறலால்
வாடிய அவன்மனம் கூடித் தளிர்த்தது;
 
  துயரக் கடலுள் மூழ்கித் துடிக்கும் 85
  அமயத் தொருமரக் கலமென அவற்குச்
சுவடி துணைசெயச் சோர்வகன் றனனே;
`என்தாய்ப் பழிப்போர் இனியிரார் உலகில்,
பொன்றாப் புகழ்நூல் புகுந்ததென் கையில்,
 
  இசையும் கூத்தும் இலங்கிய தமிழோ 90
  வசைபெறக் காண்பது?  வையகம் எங்கும்
முழக்குவென் முழக்குவென் முத்தமிழ்ப் பெருமை,
சழக்கார் பகைஎலாம் தவிடெனப் பொடியென
ஆக்குவென், எதிர்ப்பெலாம் நீக்குவென், மாசினைத்
 
  தீக்கிரை யாக்கித் தேனிசை பாடுவென்' 95
  என்றவன் செம்மாந் தேறென எழுந்தனன்;
கூடல் நகரெலாம் கொற்றவன் தமிழிசைப்
பாடல் ஒலியே பரந்தது கண்டு
வாயடங் கினரே வாதுகள் செய்தோர்;
 
  தாயினும் மேலாத் தமிழினை விழைவோன் 100
  இசையின் இயலெலாம் இசைத்தவண் இருப்புழித்  

---------------------------------------------------------------

  தவலரும் - குறையற்ற, பொன்றா - அழியாத, சழக்கர் -கயவர்.