19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை | |
|
| வஞ்சியின் ஏக்கம் | |
| | |
| பூங்கொடி அளவிலாப் புகழ்நிலை யுறினும் தேங்கெழில் சிதைவுறத் திருமணம் இன்றிக் கொஞ்சும் இளமை கொன்னே கழிய அஞ்சுபொறி அடக்கிய அறவோர் போல | |
| நெஞ்செழுங் காதலை நெருப்பினில் பொசுக்கிப் | 5 |
| பிஞ்சிற் பழுத்த பேதை ஆயினள்; எவ்வணம் இயம்பினும் எத்துணை மொழியினும் செவ்விய அவள்நிலை சிறிதும் பிறழ்ந்திலள் என்னே இவள்மனம் இருந்த வாறே! | |
| பின்னே வாழ்விற் பேதுறு வாளே | 10 |
| எனநினைந் தேங்கி இடருறூஉம் வஞ்சி | |
| | |
| வஞ்சி தேன்மொழியிடம் புலம்பல் | |
| | |
| தேன்மொழி யாகிய தெரிவையை விளித்து, `மீன்விழி மாதே! வியனிலத் தியாண்டும் இந்நிகர் கொடுமை எவ்வுதி அறிதி? | |
| தன்பெருங் கொழுநன் தனிமகன் வடிவேல் | 15 |
| வன்புடை வஞ்சரால் மாய்ந்தன னாக என்னொரு திருமகள் எழிலுறும் அருண்மொழி மாயாத் துயரால் மாழ்குதல் கண்டு வீயாத் துன்புள் வீழ்ந்தேன்; என்மகள், | |
| ஓயாக் கவலை ஒழிப்பான் வேண்டித் | 20 |
| தேயாப் பெருமனைச் செல்வமும் வாழ்வும் மறந்தன ளாகி மலையுறை யடிகள் திருந்திய குறளகம் சேர்ந்தனள்; என்னுளம் | |
--------------------------------------------------------------- |
| கொன்னே - வீணே, அஞ்சுபொறி - ஐந்துபுலம், மாழ்குதல் - வருந்துதல், ஒழிப்பான் - ஒழிக்க. | |
| | |