|
|
வருந்திய துரைத்திட வாயொன் றீங்கிலை; | |
|
அடுக்கடுக் காகத் தொடுத்தெனைச் சார்ந்த | 25 |
|
இடுக்கட் சுமையைப் பொறுத்துளேன் ஆயினும் துடுக்கி என்மகள் துளிர்பூங் கொடியை விடுக்கில ளாகி வெந்துயர்க் குழியில் படுத்தினள் அந்தோ பாவி மடமகள்! | |
|
கருங்கல் இடறிய கால்விரல் ஒன்று | 30 |
|
பெரும்புண் ணாகி வருந்துங் காலைக் கொடுத்தேள் அதனிடைக் கொட்டிய தென்று நெடுந்துயர் அடைவுழிக் கொடும்பட அரவம் தீண்டிய தென்னத் தேங்கிய கவலைக் | |
|
கூண்டுடல் ஆகிக் குலைந்தேன் தோழி! | 35 |
|
| |
|
பூங்கொடியின் எழில் நலம் | |
|
| |
|
ஆறாத் துயரால் அருண்மொழி துறந்தவண் சேரா நின்றனள் சேர்கதில் லம்ம! வாழ்வின் நலமெலாம் வகைவகை சுவைத்து மூழ்கும் பருவத்து முதிரா இளமையள், | |
|
அழகும் ஒளியும் அழியா ஓவியம், | 40 |
|
பழகும் மொழியோ பழச்சுவை மானும், துளிர்த்தும் தளிர்த்தும் தூமலர் பூத்தும் கிளைக்கும் மரந்தழீஇ மணக்கும் பூங்கொடி, விழியின் மலர்ச்சியை வியந்துரை யாடஓர் | |
|
மொழியும் உளதோ? முகமொரு முழுநிலா, | 45 |
|
நடைக்கும் இடைக்கும் நல்லதோர் உவமை படைக்கும் ஆற்றல் பாவல புலவர்க்கும் அரிதினும் அரிதே! ஆயிழை நீயும் தெரிகுவை அந்தத் தெரிவையின் நலமெலாம், |
|
மூக்கும் விழியும் நோக்குநர் உளத்தைத் | 50 |
--------------------------------------------------------------- |
|
துடுக்கி - துடுக்குக்காரி. மானும் - போலும், தீழீஇ - தழுவி, பாவல - பாடல்வல்ல, ஆயிழை - தேன்மொழி, | |
|
| |