பக்கம் எண் :

பக்கம் :140பூங்கொடி

 
  தாக்கும் இயல்பின, தகதக ஒளியின,
வார்த்தபொற் சிலைகொல்! வடியாச் சிலைகொல்!
பார்த்தவர் இவ்வணம் மயங்குவர் பைந்தொடீ!
 
     
 

பருவம் பாழ்படுவதா?

 
     
  சிறியவள் இல்லறச் செந்நெறிப் படாஅது  
  பருவமும் உருவமும் பாழ்படப் புறநெறி 55
  கருதின ளாகிக் கழிவது முறையோ?
தேடருங் குறிஞ்சித் தேனினைப் பாழ்செயும்
மூடரும் உளரோ? முக்கனி யாகிய
தேமாங் கனியும், தீஞ்சுவைப் பலவும்,
 
  கொழுங்குலை வாழைச் செழுங்கனி யதுவும் 60
  அழுங்கல் எய்திட விழுந்து புழுதியில்
நைந்து சிதைவதில் நன்மையும் உளதோ?
ஐந்து பொறியிவள் அடக்கவும் வல்லளோ?
 
     
 

கடப்பருங் காமம்

 
     
  இல்லறத் திருந்துநல் லின்பந் துய்த்தபின்  
 

நல்லஇவ் வுலகினை நஞ்சென வெறுத்துச்

65
  செல்லும் துறவரும் சிற்சில போழ்து
கொல்லும் காமங் கோட்பட் டுழன்றும்
அல்லன புரிந்தும் அலைவுறல் கண்டோம்;
ஒருநலம் உணரா துறைபவள் இவளை
 
  வருமிளம் பருவம் வருத்தா தொழியுமோ? 70
  பழிக்கும் வினைகளை இழைக்கும் வழிகளில்
நுழைத்திடும் அந்தோ! நுண்ணிடை மகளை;
 
     
 

ஆசை கெடுத்தனள்

 
     
  குடிதழைத் திடவரூஉம் குலக்கொடி இவளென
நெடிதுநினைந் திருந்தேன் கொடியவள் ஆயினள்,
 

---------------------------------------------------------------

  படாஅது - சொல்லாமல், கோட்பட்டு - கொள்ளப்பெற்று, வரூஉம் - வரும்.