பக்கம் எண் :

கோமகன் மீண்டும் தோன்றிய காதைபக்கம் : 141

 
  பரம்பரை அறுந்திடத் திறம்பினள் குழம்பினள், 75
  நரம்பறும் யாழென நலிந்தனள் மெலிந்தனள்;  
     
 

வேட்புறுங் கோமகன்

 
     
  கற்றோர் மற்றோர் கணக்கிலாச் செல்வம்
உற்றோர் இவள்மணம் ஒன்றே வேட்டுக்
கடைவிழி நோக்கிக் காத்துக் கிடப்போர்
 
  படைஎனு மாறுளர்; பரிவுறும் அவருள் 80
  செல்வமும் இளமையும் சேர்ந்தெழில் பொங்கும்
நல்லவன் கலைபயில் வல்லவன் ஒருவன்
கோமகன் என்னும் குறியுடை யானவன்
பூங்கொடி நலமுண வீங்கிய வேட்கையன்
 
  தாங்கருங் காமம் ஓங்கின னாகி 85
  உடலும் பொருளும் உயிரும் ஈயக்
கடவன் அவனை மடவனென் றொதுக்கினள்;
அப்பெருஞ் செல்வனை ஒப்பின ளாகித்
தப்பருங் காதல் தடத்தினில் நீந்தித்
 
  துணையுடன் இருந்தே தொண்டுகள் ஆற்றின் 90
     
 

வஞ்சியின் வஞ்சினம்

 
     
  பிணைவிழி மாதின் பெறலரும் இளமை
அணையிலாப் புனலென ஆகிட ஒவ்வேன்;
இவள்நலம் விழையும் இளவல் கோமகன்
 
 

தவள மாளிகை சார்ந்தவற் கொண்டு

95
  குறளகம் நீக்கிக் கொணர்வேன் அவளை;
பெருமகன் தன்பால் பேதையைப் படுத்தல்
அறமெனக் கொண்டேன், அதுமுடித் தமைவேன்;
படுத்தே னாயின் பாழுயிர்ச் சுமையை
 
  விடுத்தே அமைவேன் வெற்றுரை அன்'றெனத் 100

---------------------------------------------------------------

  திறம்பினள் - மாறினள், உண - உண்ண, பிணை - பெண்மான், தவளம் - வெண்ணிறம்.