|
| தொடுத்துரை கூறித் துணைவிழி சிவக்க உயிர்ப்பும் செயிர்ப்பும் உற்றன ளாகிப் பயனுடை நெடுந்தெரு பலவுடன் கடந்து வியனுயர் மாளிகை விறலி கண்டனள்; | |
| | |
| வஞ்சி கோமகனைச் சார்தல் | |
| | |
| வெண்சுதை பூசிய கண்கவர் மாமனைக் | 105 |
| கண்புகுந் துள்மனைக் காட்சியை வியந்தனள்; முன்னுள மலர்மணம் முகந்த தென்றல் படர்தரு மெல்லிய பவர்நுனி யசைத்துச் சுடர்விடு மாடச் சுவர்கடந் துட்புகச் | |
| செய்வினைச் சித்திரப் படாஅம் போர்த்த | 110 |
| துய்யவெண் பஞ்சணைத் தூமலர்க் கட்டில் இருந்தோன் திருந்தடி பொருந்திநிள் றேத்தினள் | |
| | |
| கோமகன் பூங்கொடியின் நலம்வினவல் | |
| | |
| வந்தவண் ஏத்திய வஞ்சிக்கு வரவுரை தந்து மகிழ்ந்து தான்பெரு களிப்பால் | |
| நல்லெயி றிலங்க நகைத்தவன் `வஞ்சி! | 115 |
| மெல்லியல் அருண்மொழி மேவிய நற்பணி அல்லல் இன்றி ஆற்றுநள் கொல்லோ? என்னுளம் இருளுறச் செய்தஅவ் விளங்கொடி முன்னியபொதுப்பணி முட்டின் றோ'என, | |
| | |
| வஞ்சியின் தூண்டுதல் | |
| | |
| `ஒருதனி ஓங்கிய திருவுடைப் பெரும! | 120 |
| பெருகிய துயரால் பேதுறத் தினளுனை என்னையும் மயக்குறுத் திடக்கடல் வீழ்த்தினள்; நின்னையும் நின்மனம் நிறைந்துள மின்னையும் பின்னிய அன்பால் பிணைந்தவ ராக்கி | |
| வதுவைக் கோலம் கண்டுநான் வாழ்த்த | 125 |
--------------------------------------------------------------- |
| பவர் - பின்னியகொடி, படாஅம் - துணி (விரிப்பு), எயிறு - பல்வரிசை, முட்டின்று - தடையில்லை, வதுவை - திருமணம். | |
| | |