|
| முதுமைப் பருவத்து முறுகிய ஆவல் கனவாய் வெறுமொரு நினைவாய்க் கழிவதோ? இனைவுறும் என்மனம் மகிழ்வுறல் என்றுகொல்? நம்பி நினக்கொரு நங்கையும் அவளே! | |
| நங்கை அவட்கொரு நம்பியும் நீயே! | 130 |
| நீமுனைந் தெழுவையேல் நேரிழை நின்னுழைக் காமுறல் திண்ணம் கடிதினில் விரைக கடிமணம் கொண்டு படிமிசை வாழ்'கென; | |
| | |
| கோமகன் நிகழ்ந்தன கூறல் | |
| | |
| இழுக்கல் நிலத்திடை இடர்ப்பட் டேகுவோன் | |
| வழுக்கல் தவிர்க்க வாய்த்தகோல் இவளென | 135 |
| வஞ்சிக் குரைப்போன், முகுந்தன் வாய்மொழி தன்செவி கேட்டுத் தென்புலப் பொழிலுட் பூங்கொடி காண்பான் போய்ப்புகுந் ததூஉம், தாங்கா வேட்கை தாங்கவோன் றன்னைக் | |
| கண்டு வெரீஇக் கற்றோர் பலர்தாம் | 140 |
| மண்டும் படிப்பகம் மங்கைபுக் கதூஉம், மெல்லியல் அல்லியை மேவி விருப்பைச் சொல்லி மணம்பெறத் துடித்துநின் றதூஉம், ஆங்கது கேட்ட அல்லி தெளிவுடன் | |
| பூங்கொடி நிலையினைப் புகன்றிருந் ததூஉம், | 145 |
| மங்கையின் மாற்றம் மதித்திடல் இன்றி அங்குள படிப்பகம் அதனும் புகுந்திட விரையும் காலை விஞ்சிய அறிவினர் நிறையிடம் அதுவென நினைத்தகன் றதூஉம், | |
| அகன்றபின் அல்லியை அணுக, வெறுத்து அவள் | 150 |
| புகன்றுபின் நல்லுரை புகட்டி நின்றதூஉம், துளக்குறு நெஞ்சம் துணையே யாக | |
--------------------------------------------------------------- |
| படிமிசை - நிலத்தின்மீது, காண்பான் - காண, வெரீஇ - அஞ்சி, மண்டும் - நிறையும், மாற்றம் - மறுமொழி. | |
| | |