பக்கம் எண் :

நூல்நிலையம் அமைத்த காதைபக்கம் : 161

 
  மிகுபொருள் அதனின் வேறொன் றில்லை,
உளத்தெழும் அன்பும், உணர்ச்சியின் வாழ்த்தும்,
 
  பெறத்தகும் அளவு பெற்றபின் எனக்குக் 50
  கொளத்தகு பொருளெது? வளத்திரு மிகுத்தோய்!
நன்றி யுடையேன்' என்றவள் கூறலும்,
 
     
 

தந்தாய் எனுஞ்சொல் தந்த மகிழ்ச்சி

 
     
  `தந்தாய் எனுஞ்சொற் புகன்றனை தாயே!
நந்தா விளக்கே! நான்பெறும் மகிழ்ச்சிக்
 
  கெல்லையொன் றுரைக்க இயல்வதொன் றில்லை; 55
  அன்பின் விளைந்த அம்மொழி கேட்டுளம்
இன்பில் திளைத்தேன் ஏழிரண் டாண்டின்
முன்னர்க் கேட்டஅம் மொழியினை நின்வாய்
மொழிந்திடக் கேட்டேன் மீண்டும் அதனை
 
  மொழிகதில் லம்ம! மொழிகதில் லம்ம! 60
  செந்தா மரைமுகச் செல்விநீ மொழிந்த
`தந்தாய்' எனுஞ்சொல் தந்தபே ரின்பம்
எத்துணை! எத்துணை! எவ்வணம் புகழ்வேன்!'
என்றுளம் கசிய இணைவிழி கசிய
 
  நின்றனர் ஆங்கண்; நேரிழை உருகித் 65
     
 

பூங்கொடி ஆறுதல் புகலுதல்

 
     
  தந்தை வடிவேல் நினைவுளந் தாக்குறத்
`தந்தாய்! தந்தாய்! தணிகநின் துயரம்;
`எந்தாய்! எந்தாய்! எனைநின் மகளெனத்
தந்தேன் தந்தேன் தவிர்கநின் கவலை;
 
  உலகிற் பிறந்தோர் ஒருநாள் மறைதல் 70
  நிலைஇய இயற்கை; நீக்கலும் அரிதே
உறவின் பாற்செலும் உளத்தெழும் அன்பினைப்
 

---------------------------------------------------------------

  இன்பில் - இன்பத்தில், எந்தாய் - எம் தந்தையே, நிலை இய - நிலைத்த.