பக்கம் எண் :

பக்கம் :162பூங்கொடி

 
  பிறரிடைச் செலுத்தும் பெற்றிமை வாய்ப்பின்
உற்றவர் பிரிவினிற் பெற்றிடும் மனநோய்
 
  அற்றிடும்; இஃதென் பட்டறி வாகும்;' 75
  எனவிழி ததும்ப இசைத்தனள் பூங்கொடி;  
     
 

கிழார் மகிழ்ந்து வாழ்த்துதல்

 
     
  மனமிகக் களித்த மாபெருஞ் செல்வர்
கைவிரல் கொண்டு கண்மலர் துடைத்து
மெய்ம்மயிர் சிலிர்த்து `மீண்டஎன் மகளே!
 
  வாழிய நெடிதே! வாழிய மகளே! 80
  சூழிடர் தொலைத்தனை! சுடரொளி துலக்கினை!
வாழ்வை மறுமுறை வளம்பெறச் செய்தனை;
 
     
 

வேண்டுவன கொள்க எனல்

 
     
  இளங்கொடி நினக்குயான் செய்யற் பாலதென்?
விளங்கிட உரைத்தருள் வேண்டுவ திதுவென;
 
  எப்பொரு ளாயினும் அப்பொருள் ஈவேன்; 85
  ஒப்பிலாச் செல்வி! உண்மையின் உரைக்கின்
`ஈதல்' எனுஞ்சொல் ஏற்புடைத் தன்று;
தீதுதீர் செல்வமும் செழுமனை யாவும்
நின்பொருள், வேண்டுவ நீயே கொள்க'
 
  இன்பினில் திளைத்தவர் இவ்வணம் புகல, 90
     
 

பூங்கொடி மறுத்தல்

 
     
  `அன்புடைப் பெரியோய்! பொதுப்பணி ஆற்றிட
என்பும் பிறர்க்கென எடுத்துளேன் வஞ்சினம்
எனக்கென ஒருபொருள் எதற்கின ஐய!
மனக்கினி யாய்!எனை மன்னித் தருள்'கெனத்
 
  தனக்கென வாழாஅத் தையல் மொழிந்திட, 95
     
 

கிழார் மீண்டும் வேண்டல்

 
     
  `ஆருயிர் மகளே! அவ்வணம் உரையேல்,  

---------------------------------------------------------------

  பட்டறிவு - அனுபவம், என்பும் - எலும்பும், மனக்கு - மனத்துக்கு.