|
| `பற்றா மாக்கள் பகைமுடித் தனர்கொல்? | 25 |
| எற்றால் இந்நிலை இம்மகன் உற்றனன்? உற்றார் எவரும் உறாஅ விடத்துச் செற்றார் இவனைச் செகுத்தனர் அந்தோ! துணையாந் தோழியும் யாங்குத் தொலைந்தனள்? | |
| அணையாப் பெரும்பழி அணையும் அந்தோ! | 30 |
| இசைக்கென வந்தவன் இறந்தனன் என்னும் வசைக்கிலக் காக வாய்த்ததிந் நிலையே! | |
| | |
| செய்தித்தாள்களின் செய்கை | |
| | |
| கொலைத்தொழில் ஒன்றே கலைத்தொழி லாகத் தலைப்பிடுஞ் செய்தித் தாள்களும் உண்டே! | |
| நாண்சிறி தின்றி நாட்டினில் உலவி | 35 |
| வீண்பழி சுமத்தும் வெள்ளை இதழ்களும் நாடொறும் தெருவில் நடமில் உண்டே! கூடுமிவ் விதழ்கள் `கொலைகொலை' என்றே பாடும் பாடும் பாரெலாம் பாடும் | |
| வசைப்பணி புரியும் வாய்க்கிது விருந்தே! | 40 |
| இசைப்பணிக் கீதோர் இழுக்கே யன்றோ? | |
| | |
| கோமகனை நினைந்திரங்கல் | |
| | |
| பரிவுக் குரியன் பாவம் இம்மகன்! முறுகிக் கிளர்ந்து மூண்டெழு காமம் பெருகிப் படர்ந்து பெட்புற் றென்னைத் | |
| திருமணஞ் செய்வான் திரிந்தனன் பலநாள்; | 45 |
| பண்ணிசை ஆய்ந்து பயின்றிடக் கருதி உண்ணிறை அவாவொடு நண்ணினன் ஈண்டு மண்ணிரை யாக மாய்ந்தனன் அந்தோ! எண்ணிய தொன்றும் ஏற்றிலன் பாவி! | |
| வேட்டவன் ஒருநாள் விழைவினை என்பாற் | 50 |
| காட்டினன் குறிப்பால்; கடிந்துரை கூறுவேன் | |
--------------------------------------------------------------- |
| பற்றாமாக்கள் - பகைவர், எற்றால் - எதனால், உறாஅ - பொருந்தாத. | |
| | |