பக்கம் எண் :

பக்கம் :176பூங்கொடி

 
  `ஒருதலைக் காமம் உடையவர் தாமே
வருதுயர்க் கடலுள் மடிவது திண்ணம்'
என்ற அம்மொழி இன்று பலித்ததோ?
 
  அன்றது மொழிந்தமைக் கின்று வருந்துவல்' 55
  என்று பலப்பல இரங்கிப் புலம்பி,  
     
 

கிழாரிடம் முறையிடல்

 
     
  உறுதுணை யாகிய பெருநிலக் கிழார்பால்
அறைகுவல் விரைந்தே என்றாங் கணுகித்
தன்னையும் பண்ணையும் முன்னி வந்தவன்
 
  பன்னிய செய்தியின் பான்மை முழுவதூஉம், 60
  மேனாள் தொட்டு மெல்லியல் அவன்மொழி
ஏலா தியாவும் எதிர்த்துரை புகன்றதூஉம்,
காதலின் பெயராற் கரையிலான் இவனால்
ஏதம் விளையினும் விளையுமென் றெண்ணிச்
 
  சண்டிலி சூழ்துணை கொண்டு நின்றதூஉம், 65
  வண்டென அலைவோன் வாளிற் படுகொலை
யுண்டு மனையினில் ஒருபாற் கிடப்பதூஉம்,
உறுதுணை யாகிய ஒண்டொடி சண்டிலி
பெருமனை நீங்கிப் பெயர்ந்து போயதூஉம்
 
  அரிவை யாவையுந் தெரிதர வுரைத்து 70
  வருபழி யஞ்சிவாடி நின்றனள்;  
     
 

கிழாரும் உடன்புறப்படல்

 
     
  பெருநிலக் கிழார்அப் பேதையைத் தேற்றி
`மருளுதல் தவிர்கஎன் மகளே! ஒன்றும்
வெருவுதல் வேண்டா, வேண்டுவ செய்வல்;
 
  வருகுவென் யானும் வஞ்சி நின்னுடன் 75
  எழு'கெனக் கூறி எழுந்தனர் ஆங்கே;  
     
 

காவலர் வருதல்

 
     
  பண்ணும் இசையும் பயில்தரு மாளிகைக்  

---------------------------------------------------------------

  அறைகுவல் - கூறுவேன், பன்னிய - கூறிய.