பக்கம் எண் :

சிறைப்படு காதைபக்கம் : 177

 
  கண்ணொரு கொலைவினை நிகழ்ந்தென் றறிந்த
காவற் படையினர் கடுகி வந்தனர்;
 
  ஏவல் மாக்கள் இருவரை வினவினர்; 80
  மாளிகை முழுமையும் சூழுறும் அறைகளும்
வாளிற் படுமகன் வடித்தசெங் குருதி
தோய்ந்து காய்ந்து தூணிடைக் கிடக்கும்
உடலும் பிறவும் உற்று நோக்கினர்;
 
  காவற் றலைவர் கற்போர் தம்மை 85
  `நீவிர் அறிந்தன நிகழ்த்துக' என்றனர்;  
     
 

மாணவன் கூற்று

 
     
  `கொலைபடு கோமகன் கலையிசை வேட்டுப்
பலநாள் எம்முடன் பயின்றனன் அறிவோம்;
ஈதொன் றன்றி வேறொன் றறியோம்;
 
  தீது நிகழ்வில் ஏதும் தெரியோம்; 90
  எமக்கிசை யூட்டுங் குலக்கொடி யாகிய
மடக்கொடி பூங்கொடி மற்றவள் தோழி
சண்டிலி என்பாள் தன்னுடன் கூடி
விண்டொட நிவந்த வியன்பெரு மாளிகை
 
  வதிவதும் அறிவோம் வாய்மையிஃ தாகும்; 95
  மதிலரண் சூழும் மாமனை யிதனுள்
எதிரிகள் எவரும் எளிதிற் புகார்'என
மாணவர் தம்முளோர் மாணவன் இயம்பக்
 
     
 

காவலர் குறுக்கு வினா

 
     
  கரவிலா துரைத்ததைக் கேட்டஅக் காவலர்,  
  `அரண்படு மாளிகை ஆதலின் ஈண்டு 100
  முரணியோர் உட்புக முடியா தென்றனை,
அவ்வா றாயின் அவனொடு முரணியோர்
எவ்வெவர் என்றெமக் கியம்புதி' என்றனர்;
 
     
 

மாணவன் மறுமொழி

 
     
  முற்படு மாணவன் `முரணியோர் உண்டெனல்